29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திடீரென நாடு திரும்பியுள்ள IPL தொடரின் இலங்கை வீரர்கள்

IPL தொடரில் விளையாடிவரும் மத்தீஷ பத்திரண, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷார ஆகிய இலங்கை வீரர்கள் திடீரென நாடு திரும்பியுள்ளனர்.

எதிர்வரும் ஜுன் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள T20 உலக கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா விசா அனுமதிக்கான நேர்முக பரீட்சையில் பங்கேற்கவே அவர்கள் வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.இதன்படி, மத்தீஷ பத்திரண, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷார ஆகியோர் அமெரிக்காவிற்கான விசாவை நடைமுறைப்படுத்துவதற்காக கொழும்பு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

இவ்வாறு நாடு திரும்பிய இலங்கை வீரர்கள், அமெரிக்க விசாவிற்கான நேர்முக பரீட்சையை இன்று (03) எதிர்கொண்டுள்ளனர். IPL போட்டிகளில் பங்கேற்பதற்காக இவர்கள் மீண்டும் இந்தியா செல்லும் திகதி குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles