வேகமாக பரவிவரும் கொவிட் 19 இருந்து பாதுகாக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பாரம்பரிய தாணியங்களை வழங்கும் நோக்குடன் ஹெகசுவைய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ஹெலசுவைய நிறுவனத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் பேரம்பலம் தேவரஜனின் தலைமையில் இடம்பெற்றது.
விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சுடன் இணைந்து பாரம்பரிய அரிசி மற்றும் தாணியங்களில் உள்ள அதி உயர் மருத்தவ குணங்களை ஆய்வு செய்து மக்களுக்கு ஹெல சுவைய அமைப்பு வழங்கி வருகின்றதுநஞ்சற்ற பாரம்பரிய தாணியங்களின் ஊடாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுப் பொருட்கள், விவசாயத்திற்கு வேண்டிய இயற்கையான நோய் கட்டுப்பாட்டு மருந்துகள் என்பன இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்ததுடன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.