இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிந்து மவுரியா என்பவர் விராட் கோலியின் ஓவியத்தை கலை நுணுக்கத்துடன் கூடிய நிழல் உருவப்படமாக வரைந்துள்ளார்.
இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மவுரியா தீக்குச்சிகள் மற்றும் மெல்லிய மரக்கீற்றுகளை பயன்படுத்தி ஒரு வடிவத்தை உருவாக்குகிறார். அந்த வடிவத்தின் மீது ஒளியை விழ வைக்கும் போது விராட் கோலி சிரிப்பது போன்ற நிழல் உருவப்படம் தோன்றுகிறது.