அம்பாறை சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்பாக இடம்பெற்ற
விபத்துச் சம்பவத்தில் 12 வயதான சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.
பல்கலைக்கழக பீடப் பக்கத்திலிருந்து வீதியை கடந்து எதிர்த் திசையில் உள்ள தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியுள்ளது.
சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். சம்மாந்துறை பிரதான வீதி உடங்கா 02 இல் பகுதியில் வசிக்கும் ஏ.எம்.பாஸீர் என்ற சிறுவனே உயிரிழந்தவராவர்.
கென்டர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.