தென்னாபிரிக்காவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் கொக்கேய்ன்: மூவர் கைது

0
68

தென்னாபிரிக்காவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டதாக கூறப்படும் கொக்கேய்ன் போதைப்பொருளை  பெற்றுக்கொள்வதற்காக ஒருகொடவத்தை சுங்க பிரிவின் களஞ்சியசாலையில் பொருட்கள் விநியோக நிலையத்துக்குச் சென்றிருந்த ஒருவர் உட்பட மூவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இலங்கைக்கு கொக்கேய்ன் போதைப்பொருளை இறக்குமதி செய்வதற்கு உதவிய மேலும் இரு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.