தேசிய பேரவையிலிருந்து ஜீவன் தொண்டமான் விலகல்!

0
199

தேசிய பேரவையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் விலகியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார். அவரது விலகலினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் தேசிய பேரவையில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததுடன், இப்பிரேரணை எதிர்ப்பு இன்றி ஏகமனமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்த்தன தலைமையில் கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. சகல நாடாளுமன்ற அமர்வு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் தேசிய பேரவையைக் கூட்டுவதற்கு முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.