தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அம்பாறை துறைநீலாவணை பொது நூலகமும் வாசகர் வட்டமும் இணைந்து நடாத்திய பரிசளிப்பு விழா,
துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் வாசகர் வட்டத்தலைவர் இ.ஜெயானந்தம் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் சா.அறிவழகன் கலந்து கொண்டார்.
வாசிப்பு மாதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கையெழுத்து சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.