தொற்று நீக்கல் நடவடிக்கையில் இராணுவத்தினர்

0
255

மூன்று நாட்கள் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு நாளைய தினம் பயணத்தடை தளர்த்தப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதிக்கு அத்தியாவசிய தேவைநிமித்தம் வருகை தரும் பொதுமக்களை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் தொற்றுநீக்கி திரவம் விசுறும் நடவடிக்கையினை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி 231வது இராணுவ படை பிரிவு கட்டளை அதிகாரி கேணல் விஜித ஹெட்டிஹாராச்சி, மட்டக்களப்பு 4 வது கெமுனு இராணுவ படை பிரிவு கட்டளை அதிகாரி லெப்டினல் கேணல் லசந்த ஜெயசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 231வது மற்றும் 4வது கெமுனு இராணுவ படை பிரிவினருடன், மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பிரிவினர் இணைந்து மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடம் மற்றும் நகர் பகுதிக்கான தொற்று நீக்கி திரவம் விசுறும் நடவடிக்கையினை முன்னெடுத்திருத்தனர்.