நக்கில்ஸ் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் நபர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சமூக ஊடகங்கள் ஊடாக, பல்வேறு நபர்கள், வனப்பகுதியில் சுற்றுலாக்களை ஒழுங்கு செய்து வருவதாகவும், வன வள பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கான பாதையை தவிர்த்து, மாற்று பகுதிகளில் சிலர் பயணிப்பதால், அவர்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளால், வனப்பகுதியின் சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.
இந்த நிலையில், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
என வன வள பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் நிஷாந்த எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார்.