ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஸ்கோவிற்கு கிழக்கே 5,600 கிமீ தொலைவில் உள்ள புரியாட்டியா பகுதியில் உள்ள உலான்-உடே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விமானம் வானில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
ரி.யு-204 என்ற விமானத்தின் இயந்திரம் வெடித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து தீப்பரவல் ஏற்கபட்டுள்ளது.எனினும் விமானத்தை அவசரமாக தரையிறக்கத்தில் விமானிகள் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.’
மேலிருந்து ஒரு சக்தி வாய்ந்த வெடிச்சத்தம் வருவதைகேட்டேன். முதலில், அது பட்டாசு என்று நினைத்தேன்,
ஆனால் ஒலி மிகவும் விசித்திரமாக இருந்தது.இது மிகவும் பயமாகவும்இருந்தது,’ என்று சேம்பவத்தை நேரில் கண்டபெண் கூறியதாக ,பிரித்தானியாவின் டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த விமானம் சீனாவை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. உலான்-உடேயில் உள்ள பைக்கால் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், சீனாவின் ஜாங்சூ நகரை நோக்கிச் சென்றபோது பற்றியெரிந்துள்ளது.
இந்த சம்பவத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.விமானத்தில் ஐந்து பேர் இருந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது கிழக்கு சைபீரிய போக்குவரத்து அலுவலகத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும், ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக ரஷ்யா சந்தித்த வான் பாதுகாப்பு பிரச்னைகள் காரணமாக சர்வதேசசிவில் ஏவியேஷன் அமைப்பின்’சிவப்பு’ விசாரணைக்கு உட்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் எட்டுமாதங்களில், ரஷ்ய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் சிவில் விமானங்கள் சம்பந்தப்பட்ட ரஷ்யாவில் 120 விமானவிபத்துகள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.