நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2024 மார்ச் வரையான மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பின் அளவு அதிகரித்ததாக தெரிவித்துள்ள மத்திய வங்கி, உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளிலிருந்து நிகர அடிப்படையில் அந்நிய செலாவணியை கணிசமான அளவில் கொள்முதல் செய்ததால் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித் ததாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த கையிருப்பு அதிகரிப்பில்
சீன மத்திய வங்கியின் அந்நிய செலாவணியும் உள்ளடங்குகிறது. வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் மார்ச்சில் 1,139 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருட மார்ச்சுடன் ஒப்பிடுகையில் இது 9.8 வீத அதிகரிப்பாக உள்ளது. தொழில்துறை பொருட்களின் ஏற்றுமதியே வருமான அதிகரிப்பில் பங்களிப்புச் செலுத்தியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9.1 வீதத்தால் அதிகரித்த அதேசமயம், யூரோ, ஸ்டேர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபா மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.