இலங்கையில் மேலும் 1,451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் ஒரேநாளில் இந்தளவு அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனையடுத்து நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4,938 ஆக உயர்ந்தது.
இவர்களில் 95 ஆயிரத்து 83 பேர் குணமடைந்த நிலையில் 8 ஆயிரத்து 737 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.