நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

0
75

நாட்டில் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை காலை 7 மணிவரை அமுலில் இருக்கும் தேசிய கட்டட ஆராச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. அதற்கிணங்க நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகள், இரத்னபுரி மாவட்டத்தின் ரட்னபுர, பலாங்கொட, எஹலியகொட, இம்பல்பே பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சீதாவக்கை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகள், கண்டியின் உடுநுவர, யட்டிநுவர, உடபலத்த பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகள், கேகாலையின் இரம்புக்கணை, தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டிய, ருவன்வெல்ல, கலிகமுவ, யட்டியாநதோட்டை, அரநாயக்க, மாவனல்ல, கெகாலை, தெரணியகலை, பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகள் , குருணாகலையின் மாவத்தகம, பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகள், நுவரெலியாவின் கொத்மலை, பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்தினபுரியின் குருவிட்ட, எலபாத்த, கிரியெல்ல, அயமக, கலவான பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.