நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் பேரணி

0
135

மட்டக்களப்பில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனஈர்ப்பு பேரணியும்
போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணியானது ஆரம்பமாகி, காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஞாபகார்த்த இடம் வரையில்
இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அமைப்பின் ஊடாக இலங்கை அரசானது உடனடியாக அடக்குமுறை சட்டங்களை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிவில் சமூகம் சார்பாக முகமட் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு
கோசங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும் போன்ற
வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.
முன்னாள் பிரதேச மற்றும் மநாகரசபை உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டனர்.