நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் மரணம்!

0
235

பதுளை – ஓயாவில் நீராட சென்ற நிலையில், 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது நண்பர்களுடன், இன்று குறித்த ஓயாவில் நீராட சென்ற நிலையில், அவர் இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பதுளை 3ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.