28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வளவ கங்கை, களு கங்கை மற்றும் சமனலவெவ அதனை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், பம்பஹின்ன, சமனலவெவ மற்றும் கல்தொட்ட ஊடாகவும் கூரகல புனித பூமி மற்றும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி எல்ல போன்ற பிரதேசங்களை பார்வையிட வரும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு சமனலவெவ மற்றும் கல்தொட்ட பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆற்றங்கரையில் கூடாரம் அமைத்து தங்குவது, செல்ஃபி புகைப்படம் எடுப்பது, நீராடுவது, மீன் பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles