நைஜீரியவில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் இதுவரை சுமார் ஒரு லட்சம் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். நைஜீரியாவின் 36 மாநிலங்களில் 27 மாநிலங்கள் இந்த வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்துள்ளன. அரசாங்கம் இன்று வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கைக்கு அமைய சுமார் 500 பேர் வரை இந்த அனர்த்தத்தில் பலியாகியுள்ளனர். இதுதவிர, 14 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்னர். இந்த நிலையில் நைஜீரியாவில் கடந்த 10 வருட காலத்தின் பின்னர் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் இதுவென ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்பானர் தெரிவித்துள்ளார்.