யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்றவர், இரண்டு நாட்களாகியும் கரை திரும்பவில்லை என பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. காணாமல்போன மீனவரைத் தேடி சக மீனவர்கள் சென்ற போது, அவர் தொழிலுக்குச் செல்லப் பயன்படுத்திய படகு கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.