பளை பொதுச் சந்தையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு!

0
73

சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு, பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனைகளைக் குறைத்து ‘ஆரோக்கியமான சூழல்’ ஒன்றை உருவாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு, இன்று, கிளிநொச்சி பளை பொதுச் சந்தையில் இடம்பெற்றது.

பொலித்தீனுக்கு மாற்றீடாக கடதாசிப் பைகள், துணிப்பைகள், பனையோலைப் பைகள் என்பவற்றை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வூட்டப்பட்டது.

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பைகளைப் பாவிப்பதற்குப் பதிலாக, பனை ஓலையால் செய்யப்பட்ட பைகளைப் பாவிப்பதற்கு, மக்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஓலைப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், சி​ரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர், பனை அபிவிருத்திச் சபை போதனாசிரியர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ​பொது மக்கள் பங்கேற்றனர்.