மட்டக்களப்பு காத்தான்குடியில் சகல பள்ளிவாயல்களும் இன்றுடன் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப் படுத்தும் வகையில் பள்ளிவாசல்களை மறு அறிவித்தல் வரை மூடுமாறு காத்தான்குடி நகருக்கான கொவிட் தடுப்பு செயலணி கேட்டு கொண்டதற்கு அமைவாக இன்று தொடக்கம் பள்ளிவாயில்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
காத்தான்குடியில் பள்ளிவாசல்களில் கூட்டு தொழுகைகள் எதுவும் இடம்பெறாது தனித்தனியாக தொழுது வந்த நிலையில் தற்போது பள்ளிவாயில்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இதே வேளை பள்ளிவாசல்களில் அலைக்கும் தொழுகைக்கான அதான் சொல்வதற்காக மாத்திரம் பள்ளிவாசல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகருக்கான தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.