பதுளை – கந்தேகெதர தேசிய பாடசாலையின் கட்டடத்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை கட்டடத்தின் கூரை சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் எந்தசவித காயங்களும் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாடசாலை கட்டடத்தின் மீது முறிந்து விழுந்த மரம் சொரணாதொட்ட பிரதேச செயலக காரியாலத்தின் தலைமையில் அகற்றப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.