பாண் விலையை குறைக்க நடவடிக்கை

0
93
பாண் ஒன்றின் விலை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு வகையான வரிகள் மற்றும் டொலரின் பெறுமதி காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக
அதன் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஒரு பாணின் விலையை 100 ரூபா அல்லது அதற்கும் குறைவாகவே பேணுவதே தமது சங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பு என என். கே. ஜெயவர்தன கூறியுள்ளார்.
அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் முயற்சியின் கீழ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு 450 கிராம் பாணை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசு தலையிட்டால், 100 ரூபாய்க்கு ஒரு இறாத்தல் பாணை வழங்குவது சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .