28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க யாழில் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள்!

அதிகரித்து வரும் அரச நில அபகரிப்பு, அரச நியமனங்களில் பாரபட்சம்,வனவள திணைக்களத்தினரின் காணி அபகரிப்பு மற்றும் அநீதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கென தமது சட்டப்புலமையைப் பயன்படுத்த விரும்பும் சட்டத்தரணிகள் அணி ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடியது. குறித்த ஒன்றுகூடல் யாழ் நகரில் உள்ளபாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனுடைய இல்லத்தில் இடம்பெற்றது.

வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமிருந்தும் வந்திருந்த சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில்ஒன்று கூடியிருந்தனர்.

மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் இயங்குநிலை சட்டத்தரணிகள் கூட்டாக ஒருமித்துச் செயற்படுவதாக இன்றைய கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டது. திறந்த அமைப்பான இந்தக் சட்டத்தரணிகள் அணியில் ஆர்வம் கொண்ட எந்தச் சட்டத்தரணியும் இணைந்து கொள்ள முடியும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles