பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சேவைக்காலம், மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த முதலாம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை, சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, இந்த சேவை நீடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியின் கீழ், ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் பிரதானியாக, மேலும் 7 மாதங்களுக்கு செயற்படவுள்ளார்.