பாராளுமன்ற விதிகளை பின்பற்றாதவர்கள் இரு தரப்பிலும் உள்ளனர் – விஜயதாச ராஜபக்ஷ

0
162

பாராளுமன்ற உறுப்பினர்கள் நாவல்கள் மற்றும் பத்திரிகைகளை வாசிப்பதற்கோ அல்லது தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடுவதற்கோ இந்த சபைக்கு வருவதில்லை என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற விதிகளை பின்பற்றாதவர்கள் இரு தரப்பிலும் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச ஒழுக்கத்தை பேண வேண்டிய பொறுப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் பிரச்சனைகளை தீர்க்க கூறி காலையில் பாராளுமன்றத்திற்கு வரும் சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்ததாகவும் கூறினார்.