பிரபாகரனால் முடியாததை எவராலும் வென்றெடுக்க முடியாது- வியாழேந்திரன் அதிரடி முழக்கம்

0
91

விடுதலைப் புலிகளின் தலைவரால் பெற்றுக்கொள்ள முடியாத தமிழீழத்தை, வேறு எவராலும் அடைந்துவிட முடியாது என இராஜாங்க அமைச்சர்
சதாசிவம் வியாழேந்திரன் சூளுரைத்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சந்தையில் அமைக்கப்படவுள்ள வணிக கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் வ.பற்குணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்,மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சு உள்ளூர் ஆதரவு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி ரூபா செலவில் இக் கட்டிடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் செங்கலடி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,செங்கலடி வர்த்தக சங்கத்தினர் , வர்த்தகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.