28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரார்த்தனை அட்டை காத்தான்குடியிலுள்ள வீடுகளுக்கு வழங்க நடவடிக்கை

கொரோனாத் தொற்று நோய் போன்ற நோய்களின் போது பிராத்தனை செய்வதற்காக பிராத்தனைகளை உள்ளடக்கியதாக பிரார்த்தனை அட்டை காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரார்த்தனை அட்டையை காத்தான்குடியிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்குவதற்காக காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்திடம் கையளிக்கப்பட்டது.

இதனை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை அலுவலக மண்டபத்தில் மௌலவி ஏ.எம்.ஹாறூன் றசாதி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் நழீமி, பிரச்சார செயலாளர் மௌலவி எம்.ஐ.கபூர் மதனி உட்பட உலமாக்கள் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஹாரிஸ் உட்பட அதன் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles