பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் இடம்பெற்றுவரும் அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“அரசியலமைப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தூக்கி எறிவதற்கான குழுக்களின் இதே போன்ற முயற்சிகளை இலங்கையும் வெகுகாலத்திற்கு முன்பு அனுபவித்தது.
இத்தகைய விரோதங்கள் கண்டிக்கப்படுகின்றன. மேலும் இந்த மோதல் நேரத்தில் பிரேசில் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுடன் நாங்கள் ஒன்றித்து நிற்கிறோம்.
ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவனங்கள் என்பன அனைத்து குடிமக்களால் உலகளவில் மதிக்கப்படுவது கட்டாயமாகும்” என்று அவர் கூறினார்.