புகையிரத வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் புகையிரதம் மோதி உயிரிழப்பு.

0
126

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் உள்ள புகையிரத வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் கந்தக்குட்டி சுந்தரம் என்ற 67 வயதுiடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதம் மோதி விபத்துச் சம்பவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.