மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ‘புதிய கிராமம் புதிய நாடு’ எனும் தேசிய ஒருங்கிணைந்த பங்குபற்றல் வேலைத் திட்டம்,
பிரதேச செயலாளர் சுதாகர் தலைமையில் கரவெட்டி விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
இவ் வருடம் முதல் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
‘புதிய கிராமம் புதிய நாடு’ எனும் தேசிய ஒருங்கிணைந்த பங்குபற்றல் வேலைத் திட்டம் ஆரம்ப நிகழ்வில், 25 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும்
மேலும் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் முகுந்தன் நவரூபரஞ்சினி, உதவி பிரதேச செயலாளர் சுபா.சதாகரன், அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுஅதிகாரி இராஜன் தவசீலன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கலாராணி மற்றும் அரச,அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.