காலி சமுத்திர மாவத்தை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் எதிர் திசையில் இருந்து வந்த பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த மேலும் பலர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.