எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு இழப்பீடாக மேலும் 9110 இலட்சம் ரூபா கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால் இந்த இடைக்கால இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் குறித்த காப்புறுதி நிறுவனத்தினால் இரண்டு தடவைகள் இடைக்கால இழப்பீட்டு தொகையாக 3480 இலட்சம் மற்றும் 3350 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
அதற்கமைய கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள 15,032 மீனவர்களுக்கு இந்த தொகை பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் அவர்களின் படகுகளின் வகைகள், மீன் பிடிக்கும் முறை மற்றும் இழந்த வருமானம் என்பவற்றின் அடிப்படையில் 80,000 முதல் 240,000 வரையில் நட்டயீட்டு தொகை வழங்கப்படவுள்ளது