29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொதுப் போக்குவரத்தில் உள்ள குறைபாடுகள் வீதி விபத்துக்களை அதிகரிக்கின்றன: கெமுனு

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு பொது போக்குவரத்து துறையின் பலவீனங்களே காரணம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், வேன்கள் மற்றும் கார்கள் போன்ற சிறிய வாகனங்களைப் பயன்படுத்துவதே அடிக்கடி விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பின்பற்றாமல் இருப்பதும் பிரச்சினைக்கு பங்களித்துள்ளது.பெற்றோல் விலை குறைவினால் மக்கள் தமது சொந்த வாகனங்களை போக்குவரத்திற்கு பயன்படுத்துவதை தெரிவு செய்துள்ளதாகவும், இது பிரச்சினையை மேலும் மோசமாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வீதிகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.பேருந்துகள் மற்றும் ரயில்கள் போன்ற பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம், நாடு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம், காற்றின் தரத்தை மேம்படுத்தலாம் மற்றும் வீதி பாதுகாப்பை மேம்படுத்தலாம் என்றார்.பொதுப் போக்குவரத்துத் துறையில் உள்ள பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கும், அனைவரின் நலனுக்காக நிலையான போக்குவரத்துத் தெரிவுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமானது என விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles