மட்டக்களப்பில்தமிழர் பண்பாடும்செல்நெறிகளும் எனும்பன்னாட்டு ஆய்வு மாநாடு

0
80

மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கம், மட்டக்களப்பு தமிழ் சங்கம், சென்னை செம்முதாய் பதிப்பகம் மற்றும் செம்புலம் ஆய்விதழ், அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம், பிரான்ஸ் வள்ளலார் சன்மார்க்க சங்கம் ஆகியன இணைந்து நடத்தும்
தமிழர் பண்பாடும் செல் நெறிகளும் எனும் பன்னாட்டு ஆய்வு மாநாடு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.


முதுநிலை விரிவுரையாளர் முருகு தயாநிதி தலைமையில், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் மாநாடு இடம்பெற்றது.
பிரதம விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் , கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கணகசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


சிறப்பு விருந்தினர்களாக முனைவர் சு.சதாசிவம், சைவபுரவர் வீ.ரஞ்சிதமூர்தி,
மேனாள் தலைமை பொறியியலாளர் டி. என்.கிருஷ்ணமூர்த்தி , அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் போர்ட் பிலயர் உட்பட பலரும் பங்கேற்றனர்.


தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் செம்புலம் ஆய்விதழ் வெளியிடப்பட்டது. ஷஷ மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கணகசிங்கம்
உட்பட 21 எழுத்தாளர்கள் மற்றும் தமிழகத்தைச் சார்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.