மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும், உயிர்மாய்ப்புச் சம்பவங்களைத் தடுக்க, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற, கலந்துரையாடலில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் ,வைத்தியர் டான் சௌந்தரநாயகம், வைத்தியர் அச்சுதன்,
வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர் ஜெகநாதன் உட்பட துறை சார் வைத்திய அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், துறை சார் அரச திணைக்கள அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.