மட்டக்களப்பில் அரசு,ஆட்சி,அதிகாரம் நூல் அறிமுக விழா இடம்பெற்றது

0
145

அருட்பணி மணி லூக் ஜோன் எழுதிய அரசு,ஆட்சி,அதிகாரம் நூல் அறிமுக விழா மட்டக்களப்பில் இடம்பெற்றது. கிழக்கு பல்கலைக்கழக கிறிஸ்தவ கற்கை நெறி முதுநிலை விரிவுரையாளர், அருட்தந்தை நவரத்தினம் அடிகளார் தலைமையில் நூல் அறிமுக விழா இடம்பெற்றது.

அரசு -ஆட்சி -அதிகாரம் என்ற நூலானது, விடுதலை வேண்டி போராடிய ஓர் சமூகம் விடுதலை பெற்றதையும், இன்னும் ஒரு சமூகத்தை அடக்கி ஆட்சி செய்ததையும், இலங்கையில் 2020ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது சாதியும் மதமும் அதிகமாக பேசப்பட்டதையும், விடுதலைப் போராட்டத்தின் போது ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட விதத்தினையும் இந்நூல் வெளிப்படுத்தி உள்ளது. நூல் அறிமுக விழாவில் சர்வ மத தலைவர்கள், பொது நிலையினர் என பலர் கலந்து கொண்டனர்.