குழந்தைகள் பகல் நேர பராமரிக்கும் நிலையம் அம்மா வீடு இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில்
வேலைக்கு செல்லும் நகர்ப்புற பெற்றோர்களின் குழந்தைகளை நம்பிக்கையுடன் பராமரிக்கும் நிலையமாக அம்மா வீடு இன்று திறந்து வைக்கப்பட்டது.
லாப நோக்கம் அற்ற, பெண்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான
லிப்ட் நிறுவனத்துடன் இணைந்து அம்மா வீடு குழந்தைகளை பராமரிக்கும் நிலையமாக இன்று திறந்து வைக்கப்பட்டது.
லிப்ட் நிறுவன நிறைவேற்று பணப்பாளர் ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக மனித நேய நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதிகளான சிரஞ்சீவி மற்றும் சாந்தி சிரஞ்சீவி,
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிருவாக பணிப்பாளர் பாரதி கென்னடி, கிழக்கு பல்கலைக்கழக குடும்ப நல வைத்திய துறை பேராசிரியர் அருளானந்தம்,
மாவட்ட சிரேஸ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.எம்.எச்.நயிமுதீன், கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய அதிபர் அருமைத்துறை மற்றும்
லிப்ட் நிறுவன உத்தியோகத்தர்கள் அம்மாவீடு குழந்தைகள் பராமரிப்பு பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலைய உருவாக்கத்தில் தூனாய் நின்ற அம்கோர் நிறுவன பிரதி முகாமையாளர்
பிரஸ்லி ரோய் கௌரவிக்கப்பட்டதுடன் குழந்தைகள் பராமரிப்பாளர்களாக பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பில் இன்று குழந்தைகள் பகல் நேர பராமரிக்கும் நிலையம் அம்மா வீடு திறந்து வைக்கப்பட்டது