மட்டக்களப்பில் காணி உறுமய திட்ட முன்னேற்றக் கூட்டம்

0
81

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் காணி உரித்து வழங்கும் முன்னேற்ற கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம் பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில் காணி உறுமய தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின்
14 பிரதேச செயலக பிரிவுகளில் காணி உரிமம் அற்ற மக்களிற்கு பூரண உரித்து வழங்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு கணணி மற்றும் ஸ்கானர் இயந்திரங்கள் அரசாங்க அதிபரினால் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவருபரஞ்சினி, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் காணி உறுதி பத்திரங்களுக்கு சமமான பூரண காணி உரிமம் மக்களுக்கு வழங்கும் செயற்பாடு, மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் மேற்பார்வையில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது