28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது

மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி அரசரட்ணம் இளங்கோவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசேட சட்ட வைத்திய அதிகாரி அரசரெட்ணம் இளங்கோவன் தலைமயின் கீழ் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பக்கட்டுக்களை கொண்ட ஜஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கியதுடன் நெஞ்சுப் பகுதியில் ஜஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணம் சம்பவித்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் தனது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்ட 22வயதுடைய சந்திரன் விதுசன் என்னும் இளைஞன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும், குறித்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தாக உறவினர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles