மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், மகப்பேற்றுச் சிகிச்சைப் பிரிவில், தாயொருவருர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக உள்ளாதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் திருமதி க.கலாரஞ்சனி அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் கிருஸ்ணவேணி எனும் தாயே நான்கு குழந்தைகளையும் பிரசவித்தவராவர். நான்கு குழந்தைகளின் ஆரோக்கிய நிலை மற்றும் வைத்திய கண்காணிப்புக்கள் தொடர்பில், மகப்பேற்று வைத்திய நிபுணர் டொக்டர் சரவணன், குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் ரி.மதன் ஆகியோர் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தனர். மருத்துவர்களுக்கு, நான்கு குழந்தைகளைப் பிரசவித்த தாய் நன்றி தெரிவித்தார்.