தியாகி அறக்கொடை நிதியத்தினால் மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
ஊடகவியலாளர் பாரிசிஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இருத்து தெரிவு செய்யப்பட்ட 100 வறிய மாணவர்களுக்கும், மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதிப்படைந்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டது.
தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனின் சொந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜயசேகர, அதிதிகளாக 23வது படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி பிரிகெடியர் நிலந்த பிரேம ரத்தின, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல்-அமீன் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.