மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் ‘மட்டு முயற்சியாண்மை -2023’ உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் பி.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் பெறுமதிசேர் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, பொருட்கள் விற்பனையும் செய்யப்பட்டன.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள் சியாவுல் ஹக், பிரசந்தன், லக்சன்யா, செயலக கணக்காளர் புவனேஸ்வரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் கணேசமூர்த்தி ஜேயராஜினி மற்றும் பிரணவசோதி, கிராம நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ராஜன், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்களான கிருஷ்ணவேணி மற்றும் ஜசோதா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.