மட்டக்களப்பில் வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்காவின் ஏற்பாட்டில் சித்திரம் வரையும் நிகழ்வு

0
478

வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்காவின் ஏற்பாட்டில் சிறார்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான வர்ணங்களுடன் விளையாடும் சித்திரச் செயற்பாடு நேற்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம் பெற்றது.
சிறுவர்களுக்கான வரைதலின் மூலம் உள ஆரோக்கியம் சிறுவர்கள் தமது சிந்தனை சக்தியை விசாலிக்க சுதந்திரமான சித்திரம் வரையும் நிகழ்வு நடைபெற்றது.

‘பெற்றோரே உங்கள் பிள்ளைகளின் உள விருத்திக்கான பாதையை வழிப்படுத்துங்கள் ‘எனும் தொனிப் பொருளில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு வண்ணாத்தி பூச்சி சமாதானபூங்கா நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் நகுலேஸ்வரன் தலைமையில் நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வண்ணத்துப் பூச்சிகள் சமாதானப் பூங்கா உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ,சிறுவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.