மட்டக்களப்பு அமிர்களி மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஆலய வண்ணக்கர் தியாகராஜா விக்ரமன் தலைமையில்
இன்று இடம் பெற்றது
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் அயோத்தி ராம ஜென்ம பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் கோயிலை பிரதிபலிக்கும் வகையில் ஸ்ரீராம பிரான் பூஜை வழிபாடு செய்த
ஆலயமாக கருதப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் ஸ்ரீ ராமபிரானை நினைவு கூரும் நாளை
சிறப்பிக்கும் வகையில் அன்னதான மடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கணேசமுதலி கமலநாதன், கணேச முதலி ராஜேந்திரா ஆகிய குடும்பத்தாரின் நன்கொடையில் நிர்மாணிக்கப்படவுள்ள அன்னதானம் மடத்திற்கான
அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது
சிவாகம குரு கமலராஜன் குருக்களின் பூஜை வழிபாடுகளுடன் இடம் பெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில், ஆலய வண்ணக்குமார்கள், உதவி வண்ணக்குமார்கள்,
ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு அமிர்களி மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.