மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீ சித்தி விநாயகர் பாடசாலையில் இருந்து, தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிகளுக்கு தெரிவான மாணவர்கள்!

0
98

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டி, தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, இன்று, மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


பாடசாலை அதிபர் வீ.முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாணவர்களுக்குப் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை முன்றலில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டு, நிகழ்வு நடைபெற்றது.


பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார் கலந்துகொண்டார். வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர், பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்