மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேச பெண்களின் நிலைபெறான அபிவிருத்திக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக
நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சின் நிதி உதவியின் கீழ் ஆயித்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலையம்
மற்றும் அதனோடு இணைந்த வெதுப்பாக தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு புதிய உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்து அங்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
நிகழ்வில் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி செல்;வி ஆடித் ஹோஸ் கலந்து கொண்டதுடன் மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகள், ஆயத்தியமலை போலீஸ் நிலைய உயர் அதிகாரிகள், பிரதேச பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு ஆயித்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் சத்துமா உற்பத்தி நிலையம்