மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் ஐயப்பன் பக்தர்களின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட 68 வது ஐயப்பன் இல்லம் இன்று கையளிக்கப்பட்டது.
அகிம்ஷா நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் மனிதாபிமான சமூக நலன் சார் பணியின் கீழ் இவ் உதவி வழங்கப்பட்டது
அகிம்ஷா சமூக நிறுவனத்தின் தலைவர் விஜய ராஜாவின் பரிந்துரைக்கு அமைய சுவிஸ்லாந்து நாட்டின் சமத்துவ மக்கள் ஒன்றியத்தின் பணிப்பாளர் இரா.விஜயகுமாரனின் மகள்களான விதுஷிகா ,தர்ஷிகா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதியுதவியில் வீடு நிர்மாணிக்கப்பட்டது.
ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற இராஜேந்திரம் குணசுந்தரி என்ற பயனாளிக்கு வீடு மற்றும் தளபாடங்கள் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் டி.தயாநிதி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுதாகரன், கிராம சேவை உத்தியோகத்தர் உதயகுமார், பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர் வனஜா, சிவில் சமூக செயல் பாட்டாளர் கதிஸ் வரன், ஐயப்பன் இல்ல பக்தர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.