மட்டக்களப்பு கருங்காலிச்சோலை ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலயத்தில், வாசிப்பில் இடர்படும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.
பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையத்தின் தலைவர் கி.மருதீபன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
வேள்ட்; விசன் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், கடந்த ஒரு வருட காலமாக வாசிப்புக்கான பிரத்தியேக வகுப்புக்கள், விசேட ஆசிரியர்கள் மூலம்
நடைபெற்றது.
இவ் வகுப்பினை நிறைவு செய்த மாணவர்களுக்கே பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கோறளைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், வேள்ட் விசன் நிறுவன முகாமையாளர் ஏ.ரவீந்திரன், பேத்தாழை விபுலானந்தா கல்லூரி அதிபர் சி.முருகவேல், கருங்காலிச்சோலை ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலய அதிபர் யோ.தவலெட்சுமி என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்