மட்டக்களப்பு காத்தான்குடியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றமை அவதானிக்கப்பட்ட நிலையில், வீடுகள் தோறும், டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும், சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன், தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் இருந்தும், வரவழைக்கப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அதிகாரிகள் 50 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
டெங்கு குடம்பிகள் அழிக்கப்பட்டதுடன் டெங்கு பரவும் வகையில் காணப்பட்ட வெற்று டயர்கள், சிரட்டைகள் என்பனவும் அழிக்கப்பட்டன. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சரவணபவன் இந் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தார். சுற்றுப் புறங்களை சுத்தமாகப் பேணாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.