28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு காந்திபூங்காவில்
காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள்

இன்று காந்தி ஜெயந்தி தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் அதன் சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பு காந்திபூங்காவில் நேற்று நடைபெற்றது. காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலையருகில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய தூதுவர் கோபால் பக்லே பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.நிகழ்வின் போது காந்தியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ரகுபதி ராக ராஜாராம் பாடலும் இசைக்கப்பட்டது.

காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினையும் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் நினைவுகூருவதை எண்ணி தான் பெருமைகொள்வதாக இந்திய தூதுவர் இதன்பொது கருத்து தெரிவித்தார்.அகிம்சையினை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினம் காந்தி ஜெயந்தி தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles